தாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்
உறங்காத விழிகள் இரண்டும் கண்ணீர் என்னும் ஆற்றில்
ஓடிவரும் நதியலைகள்
காலத்தின் கண்ணீர் மொழி
போகுமிடமெலாம் கதை கூறுமோ
சோகங்களை கூறி மெல்ல கலைந்தோடுமோ
நீ நடந்த பாதை எல்லாம்
நான் நடந்து பார்த்தேன் மகனே
தேராக நீ அசைந்த பாதையிலே
நினைவுகளின் ஊர்கோலம் கண்ணே
நெஞ்சில் ஆடும் நினைவலையில்
சிறுமலரின் மழலை மொழி
சிலுவையாகி எந்தன் நெஞ்சில் சுமையாகுமோ
சுமைதாங்கி ஒன்றை காலம் தரகூடுமோ
தேன் கொடுத்த பூக்கள் எல்லாம்
சருகாக உதிரும் கோலமே
வேர்பிடித்த மண்ணில்
மழை நீரின் ஈரமே
காணுகின்ற கனவுகளில்
துரத்தி வரும் உன் நினைவு
பூமலருகின்ற வேளை புயல் வீசியதோ
தீ இல்லாமலே அனல் பேசியதோ
வான் பார்த்து போகும் பயணம் உனக்கு
மண் மீது நரகம் எனக்கு
நீ நடை வண்டி பயின்ற காலம் மனதில்
நடைபோடும் நேரம் இன்று
நீராக மாறிய மேகமே
கண்ணீராக மாறிய சோகமே
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem