என்ன வாகப் போகிறாய்நீ? 
மருத்துவரா, நடனக் கலைஞரா 
முத்துக் குளிப்பவரா? அவர்கள் 
கேட்பதை நிறுத்தப் போவதில்லை! 1 
என்ன வாகப் போகிறாய்நீ? 
நான்நானாய் இருப்பதை நிறுத்த 
எதிர்பார்க் கிறார்களோ? அவர்கள் 
கேட்பதை நிறுத்தப் போவதில்லை! 2 
வளரும் பொழுதுநான் தும்மலாய் 
இருந்தந்த என்விரோதி களின்மேல் 
என்னிடத் திலுள்ள கிருமிகளை 
வன்மையாய்த் தெளிக்கப் போகிறேன்! 3 
வளரும் பொழுதுநான் தேரையாய்ப் 
பிறந்து வந்து வீணரெல்லாம் 
கேட்கும் மூளையில்லா கேள்விகளைக் 
கூட்டி சாலையில் குவிப்பேன்! 4 
வளரும் பொழுதுநான் குழந்தையாகி, 
என்ன வாகப் போகிறாய்நீ 
என்று கேட்போரைக் கிறுக்காக்கி 
முழுநாளும் விளையாட்டுக் காட்டுவேன்! 5                
Without knowledge one cannot say anything by intuition about what one will be in the future!
Thanks for your nice comment.